Sunday, December 26, 2010

ஒரு தலைராகம். . .!


குடை இல்லாததால்
மழையில் நனைந்து
கொண்டே செல்கிறாய்
நீ...

குடை தராத உன்
அம்மாவை திட்டுவதா
இல்லை உன்னை
நனைக்கும் மழையை
திட்டுவதா என
நினைத்து கொண்டே
மழையில் நடந்து வருகிறேன்
நான்...
உனக்கு தர தைரியமில்லாத
என் குடையோடு....!

No comments:

Post a Comment