
நான் அன்றாடம் என் அலுவலகத்துக்கு பயணிக்கும் போது சென்னை மத்திய ரயில் நிலையத்தின் அருகே உள்ள ஒரு சுரங்க வழி நடை பாதையில் ஒரு ஊனமுற்றவரை பார்ப்பேன், அவரின் தோற்றம் என்னை மிகவும் வேதனை படுத்தியது, நம் தாய்திருநாட்டின் நாணயங்களை கையில் வைத்துக் கொண்டு பேச இயலாமல், தன் கையை தரையில் அடித்துக் கொண்டு அன்றாடம் வாழ்க்கை வாழ மற்றவரை எதிர்ப்பார்க்கும் அந்த மனிதரால் நடக்க கூட இயலாமல் ஊர்ந்து தான் செல்கிறார், என்னால் தற்போது அவருக்கு உதவமுடிந்ததது பொருள் உதவி மற்றும் கனிவான பேச்சி அன்றாடம் அதை தான் செய்கிறேன். கண்ணில் கண்டிராத கடவுளுக்கு கொடுக்கும் அன்பளிப்பை, உடலால் ஊனமுற்ற நலிந்த மக்களுக்கு கொடுத்து அவர்களிடம் பெரும் ஆசிர்வாதம் கடவுளின் வரதுக்கு சமம். உடல் ஊனமுற்றோருக்கு முடிந்த உதவியை செய்து அதில் ஆனந்தம் பெறுவோம்.
அன்பே சிவம். !!!
அன்பே சிவம். !!!
இப்படிக்கு,
ஊனமுற்றோரின் வாழ்க்கை எவ்வளவு கொடிது என்பதை உணர்ந்த வாலிபன்.. ஏன் என்றல் என்னை முதுநிலை மருந்தாக்கியல் பட்டம் கஷ்டப்பட்டு வைத்து இன்று என்னை ஓர் உதவி ஆராய்ச்சியாளராக பார்த்து மகிழ்ச்சி அடையும் என் தந்தையும் ஊனமுற்றவர் தான் உடலால்...
கஷ்டப்படுபவர்களுக்கு உதவுங்கள். . .
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
No comments:
Post a Comment